×

கல்குவாரியில் கல் எடுக்க முயன்றவர் கைது

அரவக்குறிச்சி ஜூலை 18: அரவக்குறிச்சி அருகே கல்குவாரியில் கல் எடுக்க முயன்றவர் கைது செய்யப்பட்டார், கல் எடுக்க பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. அரவக்குறிச்சி அருகே கல்குவாரியில் ஜேசிபி எந்திரம் மூலம் சட்ட விரோதமாக கல் எடுப்பதாக கரூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறையின் கனிமவள பிரிவு தனி வருவாய் ஆய்வாளர் கார்த்திக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் அரவக்குறிச்சி போலீசார் உதவியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள அஞ்சாத கவுண்டன் பாளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரம் மூலம் கல் எடுக்க முயன்ற அரவக்குறிச்சி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியை அடுத்த கனவாய் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மகன் சதீஷ்குமார் (34) என்பவரை அரவக்குறிச்சி போலீசார் கைது செய்தனர். ஜெசிபி இயந்திர உரிமையாளர் அரவக்குறிச்சி அம்பிகை நகர் பகுதியில் சேர்ந்த துரைசாமி மகன் சிவாஜி கணேசன் (55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags : Aravakurichi ,JCB ,Karur ,
× RELATED லாபேட்டையில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது