×

கரூரில் தேங்காய் சுடும் நிகழ்ச்சி

கரூர், ஜூலை. 18: ஆடி 1ம் தேதியை முன்னிட்டு தேங்காய் சுடும் நிகழ்வு நடைபெற்றது.கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றங்கரையோர பகுதிகளில் இளைஞர்கள், சிறுவர், சிறுவர்கள் ஒன்று சேர்ந்து, தேங்காயின் உட்புறம், வெல்லம், பாசிப்பயறு, பொட்டுக்கடலை என்பன போன்ற முக்கிய உணவுப் பொருட்களை புகுத்தி, அதனை நெருப்பில் சுட்டு வழிபட்டு அனைவரும் பங்கிட்டு சாப்பிட்டனர். கரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடி 1ம்தேதி இந்த நிகழ்வு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில், சிறுவர், சிறுமிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

 

Tags : Karur ,Aadi ,Karur district ,Amaravati ,Cauvery ,
× RELATED காவிரி நீர் திறப்பு விவகாரம்;...