×

மதுபோதையில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

 

திருவள்ளூர், ஜூலை 18: திருவள்ளூர் அருகே மதுபோதையில் தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் கண்டிகை, ராமதாஸ் தெருவை சேர்ந்தவர் கோகுல் (40). இவர், வயலூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர், நேற்று முன்தினம் மதுபோதையில் இரவு வீட்டிற்கு வந்து, தனது அறைக்கு தூங்கச் சென்றுள்ளார்.

மறுநாள் காலையில் ஜன்னல் வழியாக பார்த்தபோது, கேபிள் வயரினால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோகுலின் மனைவி பிரியா, இதுகுறித்து மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Thiruvallur ,Gokul ,Ramadoss Street ,Venkathur Kandigai ,Kadambattur ,Union ,Vayalur ,
× RELATED நம்ம ஊரு, நம்ம பள்ளி திட்டத்தில் அரசு...