புதுடெல்லி: வந்தே மாதரம் பாடுவதை தடுத்தாலோ அல்லது அவமதிப்பு செய்தாலோ 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில், புதிய மசோதாவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு தாக்கல் செய்கிறது. வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு, 150 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை குறிக்கும் வகையில், கடந்த ஜனவரியில், அரசு நிகழ்ச்சிகளில் அப்பாடலை பாட வேண்டும் என, உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. தற்போது நாளை மறுநாள் தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரில், மக்களவை தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின், வந்தே மாதரம் பாடலுக்கு இடையூறு விளைவித்தாலோ அல்லது அவமரியாதை செய்தாலோ, அல்லது அதை பாட மறுத்தாலோ அல்லது முழுமையாக பாட மறுத்து சில பகுதிகளை நீக்கி, சில வரிகளை மட்டும் பாடினாலோ, அது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். இதற்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது.
