×

ஸ்ரீரங்கம் கோயில் சார்பாக பட்டுவஸ்திரம் சமர்ப்பணம்; திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆனிவார ஆஸ்தானம்: புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதி உலா

 

திருமலை: சூரிய நாட்காட்டியைப் பின்பற்றும் தமிழ் நாட்காட்டியின்படி ஆனி மாதம் முடிந்து ஆடி தொடங்கும் நாளில் கடக சங்கராந்தி கொண்டாடப்படுகிறது. இதனை ஆனிவார ஆஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் வருமானம், செலவு, கையிருப்பு போன்றவற்றின் ஆண்டு கணக்குகள், இந்த ஆனிவார ஆஸ்தானத்தில் இருந்து பழைய கணக்கு முடித்து புதிய கணக்கு தொடங்குவது, ஏழுமலையான் கோயிலை அந்த காலத்தில் நிர்வகித்து வந்த மகந்துகள் கடைப்பிடித்து வந்தனர்.

தேவஸ்தான அறங்காவலர் குழு அமைக்கப்பட்ட பிறகு ஆண்டு வரவு செலவுத் கணக்கு மார்ச்- ஏப்ரல் மாதங்களுக்கு மாற்றப்பட்டு தொடர்ந்து கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் சம்பிரதாய வரவு, செலவு, இருப்பு சமர்ப்பிக்கும் ஆனிவார ஆஸ்தானத்தில் உற்சவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனிவார ஆஸ்தானம் நேற்று நடைபெற்றது. ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் உற்சவத்தின் போது ஸ்ரீரங்கம் வஸ்திரமும் ரங்கநாதர் கோயிலில் நடைபெறும் உற்சவத்தின் போது ஏழுமலையான் கோயில் பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரம் தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் ஊர்வலமாக கொண்டு சென்று தேவஸ்தான செயல் அதிகாரி ரவிசந்திரா, அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வஸ்திரம் மூலவருக்கும் உற்சவருக்கும் அலங்கரிக்கப்பட்டது.

புஷ்ப பல்லக்கு ஊர்வலம்
ஆனிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார்களுடன் புஷ்ப பல்லக்கில் நேற்று மாலை எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

Tags : Srirangam ,Anivara Asthanam ,Tirupati Ezhumalaiyan ,Swami Vedith Ula ,Pushpa Pallak ,Tirumala ,Kadaka Sankranti ,Ani ends ,Aadi ,Tirumala Tirupati Devasthanam… ,
× RELATED ரோகித் சர்மா ஓய்வு பெறவிருப்பதாக...