×

அமர்நாத் யாத்திரை 3.45லட்சம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்

 

ஜம்மு: அமர்நாத் யாத்திரை தொடங்கியதில் இருந்து இதுவரை 3.45லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை கடந்த 3ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிலிங்க தரிசனத்துக்காக புறப்பட்டுச்செல்கின்றனர். 3880மீட்டர் உயரத்தில் குகைக்கோயிலில் இதுவரை 3.45லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.

நேற்று அதிகாலை 4640க்கும் மேற்பட்டோரை கொண்ட 16வது குழுவினர் யாத்திரைக்காக புறப்பட்டுச்சென்றனர். 171 வாகனங்களில் சென்ற இவர்களில் 1626 பேர் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் வழித்தடத்திலும், 3014 பேர் தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய பஹல்காம் வழித்தடத்திலும் யாத்திரை செல்கின்றனர்.

Tags : Amarnath Yatra ,Pani Linga ,Jammu ,Kashmir ,
× RELATED பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கூடியது!!