புதுவையில் 10 பேரிடம் ரூ.2.86 லட்சம் மோசடி

புதுச்சேரி, ஜூலை 17: புதுவையை சேர்ந்த 10 பேரிடம் ஆன்லைனில் ரூ.2.86 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி பழைய சாரம் பகுதியை சேர்ந்த ஆண் நபர், அவரது முகநூல் பக்கத்தில் வந்த போலியான டி-மார்ட் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். பின்னர் அந்த செயலி மூலம் பொருட்களை ஆர்டர் செய்த முயன்றபோது, அவரது கிரெடிட் கார்டிலிருந்த ரூ.1.59 லட்சம் எடுக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.புதுவை மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் வந்த விளம்பரத்தை நம்பி மர்ம நபரை தொடர்புகொண்டு பகுதி நேர வேலை குறித்து கேட்டுள்ளார். தொடர்ந்து, மர்ம நபர் கூறியதை நம்பி பெண், மர்ம நபருக்கு ரூ.49 ஆயிரத்தை அனுப்பி, அவருக்கு ெகாடுக்கப்பட்ட பணிகளை முடித்துள்ளார். பின்னர் அதில் சம்பாதித்த பணத்தை அவரால் எடுக்க முடியவில்லை. அதன்பிறகே அவர் ஏமாந்ததை உணர்ந்தார்.

புதுவை நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த ஆண் நபர் ரூ.21,500, முத்தியால்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ரூ.12 ஆயிரம், கருவடிக்குப்பத்தை சேர்ந்த ஆண் நபர் ரூ.9 ஆயிரம், வில்லியனூரை சேர்ந்த பெண் ஒருவர் ரூ.1,050, முத்திரையர்பாளையத்தை சேர்ந்த ஆண் நபர் ரூ.15 ஆயிரம், வில்லியனூரை சேர்ந்த ஆண் நபர் ரூ.8,300, லாஸ்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ரூ.10,500, வில்லியனூரை சேர்ந்த பெண் ஒருவர் ரூ. ஆயிரம் என ஏமாந்துள்ளனர். மொத்தமாக ரூ.2.86 லட்சத்தை இவர்கள் இழந்துள்ளனர்.இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: