‘வறட்சி-2026’ டேக்-1 ஆக்‌ஷன்… விவசாயிகள் ‘ஷூட்டிங்’ ஆர்ப்பாட்டம்: செய்யாறு குறைதீர்வு கூட்டத்தில் பரபரப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அனக்காவூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க வந்த விவசாயிகள் முன்னதாக கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சினிமா ஷூட்டிங்கில் கதாநாயகனுக்கு மேக்கப் போடுவது போல் மேக்கப் போட்டு நாற்காலியில் அமர வைத்து ‘டேக்-1 வறட்சி-2026’ என எழுதி கிளாப் அடித்து ஆக்‌ஷன் எனக்கூறி விவசாயிகள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்தில் பயிர் கடனை முழுதும் தள்ளுபடி செய்ய வேண்டும், மாவட்டத்தில் 25,000 ஏக்கரில் சொர்ணவாரி சாகுபடி கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டு மகசூல் இழந்துள்ளது. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். பயிர் பாதிப்புகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் நடித்துக் காண்பித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: