×

சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்

 

சென்னை: நாகர்கோவில் சிறையில் சபரிவர்மன் காவலர்கள் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். சிறை மரணங்களை மூடி மறைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. லாக்அப் மரணங்களுக்கு காரணமானவர்கள் உறுதியாக தண்டிக்கப்படுவர். புழல் சிறைக் கைதி உயிரிழந்தது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. புழல் சிறைக் கைதி உயிரிழப்பு தொடர்பாக தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பழனி நில விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். பழனி நில மோசடி புகாரில் தவெகவினருக்கு தொடர்பு இல்லை என்றும் கூறினார்.

Tags : Minister ,Nirmal Kumar ,Chennai ,Sabarivarman ,Nagercoil ,Puzhal ,
× RELATED நீங்க டிவிகே தானே? கலெக்டரை கலாய்த்த ‘பப்ளிக்’: வைரலாகும் வீடியோ