பேராவூரணி அரசு கல்லூரியில் கல்வி வளர்ச்சி நாள் விழா

பேராவூரணி, ஜூலை 16: பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரியில் முன்னாள் முதல்வர் காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ராணி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக நேதாஜி மருதையார் சமூக கல்வி அறக்கட்டளை நிறுவனர் நேதாஜி தட்சணாமூர்த்தி கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள், நோட்டு, பேனா வழங்கி காமராஜர் கல்வி வளர்ச்சிக்கு ஆற்றிய சாதனைகள் குறித்து பேசினார் .

விழாவில் பேராசிரியர்கள் ஜெயக்குமார், நித்யசேகர், மோகனாசுந்தரம், அருள்மொழித்தேவன், செந்தில்குமார், செந்தமிழ்செல்வி, உமா, ராஜேஷ் முத்துகிருஷ்ணன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் துறை தலைவர் ஜமுனா நன்றி கூறினார்.

 

Related Stories: