×

சிறையில் தஞ்சை கைதி உயிரிழப்பு

சேலம், ஜூலை 16: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த நடுத்தெரு பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன் சதீஸ்குமார் (48). இவரை கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் வழக்கு ஒன்றில் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்திருந்தனர். இவருக்கு வலிப்புநோய் பாதிப்பு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை சதீஸ்குமாருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அருகில் இருந்த சக கைதிகள் அவரை மீட்டு சிறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சதீஸ்குமாரை சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே சதீஸ்குமார் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags : Thanjavur ,Salem ,Satheeskumar ,Saminathan ,Nadutheru ,Ammapettai ,Thanjavur district ,Krishnagiri district police ,Salem Central Jail ,
× RELATED கஞ்சா கடத்தல் வாலிபர் குண்டாசில் கைது