×

கஞ்சா கடத்தல் வாலிபர் குண்டாசில் கைது

 

வேலூர், ஜூலை 31: கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். காட்பாடி விருதம்பட்டு டி.கே.புரத்தில் கஞ்சா விற்பனை செய்ததாக விருதம்பட்டு போலீசார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நடத்திய சோதனையில், அதேபகுதியைச் சேர்ந்த சேர்ந்த விஷ்வா(25) என்பவரை கஞ்சா கடத்திய வழக்கில் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட விஷ்வா மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேலூர் எஸ்பி சிவராமன், கலெக்டர் லீலா அலெக்ஸிற்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் விஷ்வாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் லீலா அலெக்ஸ் உத்தரவிட்டார்.

Tags : Guntazil ,Vellore ,Kadpadi Virudhampattu ,D. K. Police ,
× RELATED வேலூர் எஸ்பி அலுவலகத்தில் புகார்: கை...