திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு வீடு புகுந்து அரிவாள் வெட்டு.! தடுத்த பெண்ணின் தாய் வெட்டிக் கொலை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குறிச்சியில் திருமணத்திற்கு மறுத்த பெண்ணின், தாய் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கல்குறிச்சியை சேர்ந்த இளம்பெண் வர்ஷா (21) . இவருக்கும் அவரது உறவினர் யுவராஜாவிற்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வர்ஷா, யுவராஜாவை திருமணம் செய்ய விருப்பம் இல்லாததால் குடுமத்தினருடன் ஆலோசித்து திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் திருமணம் செய்ய மறுத்த வர்ஷாவை வீடு புகுந்து வெட்டியுள்ளார். மகள் வெட்டப்படுவதை பார்த்து தடுக்க ஓடி வந்த தாய் விநாயகஜோதி(45) மீதும் யுவராஜ் அரிவாளால் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார்.

படுகாயம் அடைந்த வர்ஷாவுக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாளால் வெட்டப்பட்ட விநாயக ஜோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய யுவராஜ், மல்லாங்கிணறு காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

 

 

 

 

 

 

 

Related Stories: