ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்வு..!!

ஈரோடு: ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்ந்துள்ளது. ஈரோடு சந்தையில் மஞ்சள் விலை ஒரே நாளில் ரூ. 700 உயர்ந்து ஒரு குவிண்டால் ரூ. 18,463க்கு விற்பனையாகிறது. மஞ்சள் விலை கடந்த மாதம் குவிண்டால் ரூ.14,500க்கு விற்பனையான நிலையில், ஒரே மாதத்தில் ரூ.4000 உயர்ந்துள்ளது. இருப்பு குறைவு, உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக மஞ்சள் விலை உயர்ந்துள்ளது. மஞ்சள் சாகுபடி பரப்பு குறைந்துள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: