பாலக்காடு அருகே பஸ் மீது லாரி மோதி 12 பயணிகள் காயம்

பாலக்காடு, ஜூலை 15: பாலக்காடு அருகே நின்ற பஸ் மீது லாரி மோதி 12 பயணிகள் காயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர்-பாலக்காடு என்.எச்., 47 தேசியசாலையில் திருச்சூரில் இருந்து பாலக்காடு நோக்கி தனியார் நேற்று பஸ் புறப்பட்டது.

அஞ்சுமூர்த்திமங்கலம் பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றபோது பின்னால் வந்த லாரி, பஸ் மீது மோதியது. இதில் பெண்கள் உள்பட 12 பஸ் பயணிகள் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மற்றும் போலீசார் மீட்டு இரட்டக்குளத்திலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வடக்கஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: