கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது

 

குன்னூர், ஜூலை 9: குன்னூரில் புற காவல் நிலைய கண்ணாடிகளை உடைத்த வாலிபர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். குன்னூர் பேருந்து நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 20ம் தேதி வாலிபர் ஒருவர் கடுமையான போதையில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, அருகில் கிடந்த இரும்பு குழாய் ஒன்றை எடுத்த அவர், அங்கிருந்த புறக்காவல் நிலையத்தின் கண்ணாடிகளை சரமாரியாக அடித்து நொறுக்கினார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், அவரைத் தடுக்க முயன்றனர். ஆனால், அந்த போதை ஆசாமி போலீசாரையும் இரும்பு குழாயால் தாக்க முயன்றதால் பேருந்து நிலைய வளாகத்தில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. பின் அங்கிருந்த போலீசார், அந்த நபரை மடக்கிப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

Related Stories: