கீவ்: உக்ரைன் -ரஷ்யா போர் 5 ஆண்டுகளை கடந்தும் முடிவின்றி நீடிக்கிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்காத நிலையில், இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளன.
தென்மேற்கு ரஷ்யாவின் சமாரா பகுதியில் சிஸ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இயங்கி வருகிறது. இது ரோஸ்நெஃப்டு என்ற எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். இந்த சுத்திகரிப்பு நிலையத்தை குறி வைத்து உக்ரைன் நேற்று அதிகாலை வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றி உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள், ஒரு தொழில்துறை வளாகம் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்தன. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். ஒரு குழந்தை உள்பட 3 பேர் காயமடைந்தனர். இதனிடையே, அசோவ் கருங்கடல் வழியே சென்ற ஒரு எண்ணெய் கப்பல் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் எந்த பாதிப்பு ஏற்படவில்லை.
