வியட்நாம் பூ குவாக் தீவு அருகே இந்திய சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய சுற்றுலா பயணிகள் 32 பேர் மற்றும் 3 ஊழியர்களுடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது. 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் மீதமுள்ளவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது. கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான படகில் தமிழர்களும் இருந்தனர்.
