நோபல் பரிசு தர கோரிக்கை இந்தியா- பாக். போரில் 11 விமானம் வீழ்த்தப்பட்டன: அதிபர் டிரம்ப் மீண்டும் தகவல்

வாஷிங்டன்: பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலை தொடர்ந்து நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரை தான் தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். இந்த நிலையில், அதிபர் டிரம்ப் மீண்டும் கூறுகையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல் அணு ஆயுத மோதலாக மாறவிருந்தது.4 நாட்கள் நடந்த போரில 11 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் உட்பட 8 போர்களை தீர்த்து வைத்ததற்காக வேறு யாரையும் விட எனக்கே நோபல் அமைதி பரிசு கிடைத்திருக்க வேண்டும். இந்த மோதலை நிறுத்தியதன் மூலம் 3 கோடி முதல் 5 கோடி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்னை புகழ்ந்தார். இதை விட வேறு என்ன வேண்டும்’ என்றார். ஆனால் டிரம்ப் குறிப்பிட்ட சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் எந்த நாட்டை சேர்ந்தது என்பது பற்றி டிரம்ப் விளக்கவில்லை.

Related Stories: