வீட்டில் தனியாக தூங்கிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

 

மாதவரம், ஜூலை 10: வீட்டில் தனியாக தூங்கிய இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உடந்தையாக இருந்த உறவினர் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை காசிமேடு சிங்காரவேலர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் சரண்யா (20, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகி கணவர் உள்ளார். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், இரவு வீட்டில் தனியாக தூங்கியுள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர், சரண்யாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் மன உளைச்சல் அடைந்த இளம்பெண், அதிகளவில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து இளம்பெண், காசிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

பாலியல் தொல்லை வழக்கு என்பதால் போலீசார், இந்த வழக்கை ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். அவர்கள் நடத்திய விசாரணையில், காசிமேடு பகுதியை சேர்ந்த ராமு, இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், இதற்கு உடந்தையாக அவரது உறவினரான காசிமேடு திருவள்ளுவர் நகரை சேர்ந்த மாலதி (41) என்பவர் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: