பெரம்பலூர், ஜூலை 10: வி.களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு சிறப்புப் பட்டிமன்றம் நடைபெற்றது. தமிழ் சமூகத்திற்கு அதிகம் கேடு தருவது போதை பொருளா அல்லது அலைபேசியா என்கிற தலைப்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பட்டிமன்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சிலம்பரசன் தலைமை வகித்தார். பள்ளியின் முதுகலை ஆசிரியர் செல்வராசு வரவேற்றார்.
