சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் நிருபர்களிடம் கூறியதாவது: காலை 12 மணிக்கு உள்ளாகவும், இரவு 10 மணிக்கு மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவது கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாட்டிலுக்கு ரூ.10 வாங்கியவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து ஊதிய உயர்வு இருந்தால், இந்த பிரச்னையில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.
அந்த செலவினங்கள் குறையும் வகையிலும், வாடகை பிரச்னையும் தீர்க்கப்படும். பாட்டிலுக்கு ரூ.10 பிரச்னைக்கு தீர்வு காண ஊழியர்களுக்கு 25 சதவிகிதம் ஊதிய உயர்வு வழங்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். டாஸ்மாக் ஊழியர்களுக்கு வரும் மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும். ஊதிய உயர்வால் அரசுக்கு ரூ.110.74 கோடி கூடுதல் செலவாகும். அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு கூடுதலான நேரத்தில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
எம்.ஆர்.பி. விலையில் மது விற்பனை செய்வதற்கும், முறைகேட்டை தவிர்க்கவும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மது விலையை உயர்த்தி வருவாயை பெருக்குவது அரசின் நோக்கமல்ல. துறையை சரிசெய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கம். மதுபானங்களின் விலை உயராது. கூடுதல் கட்டணம் வாங்கியதாக 30 முதல் 40 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் பார் டெண்டர் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பள்ளி மாணவர்களிடையேயான போதைப்பழக்கம் விழிப்புணர்வுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதே முறையே போதுமா அல்லது வேறு வகையான விழிப்புணர்வு தேவையான என்பதும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.மேலும், ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ. கொண்டு வரப்படும். எப்எல்-1 பார்களில் 21 வயதுக்குள்பட்டவர்களை அனுமதித்தால், பாரின் அனுமதி ரத்து செய்யப்படும். அதையும் நெறிமுறைப்படுத்த வேண்டும்.
கூடுதலாக ரூ.10 வசூல் செய்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. கூடுதலான விலைக்கு விற்ஸ்ரீறால் நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதலான விலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தால் பணி நீக்கம்கூட செய்யப்படுவார்கள். கட்சி நிதி எப்படி அரசிற்கு வருமானமாக வந்ததோ அதேபோல் நுகர்வோர் பணம் யாரும் எடுக்கக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்.
