சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்து முதல்வர் விஜய் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: உங்கள் பெயரை எதிரொலிக்கும் ஒவ்வொரு ஆரவாரமான விசில் சத்தம் முதல், நீங்கள் உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கும் எண்ணற்ற இதயங்கள் வரை, உங்களது இந்த வரலாற்று பயணம் தமிழ்நாட்டின் விளையாட்டு உணர்வோடு பிரிக்க முடியாத ஓர் அங்கமாக கலந்துள்ளது.
நமது ‘கேப்டன் கூல்’ மகேந்திர சிங் தோனிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள். கிரிக்கெட் உலகில் நீங்கள் படைத்த அசாத்திய சாதனைகளும், அமைதியான தலைமைப் பண்பும், எளிமையான குணமும் தலைமுறைகளை கடந்து முன்னுதாரணமாக திகழ்ந்து வருகின்றன. நீங்கள் நல்ல உடல்நலத்தையும், மகிழ்ச்சியையும், தொடர் வெற்றிகளையும் பெற்று, பல்லாண்டுகள் சிறப்புடன் வாழ உளமார வாழ்த்துகிறோம். உங்களுக்கான விசில் ஒலிகள் இன்னும் ஓங்கி ஒலிக்கட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
