கே.சொக்கலிங்கம், வீரபாண்டியன் ஹென்றி டிபேனுக்கு வி.சி.க. விருதுகள்

சென்னை: விசிக விருதுகள் வழங்கும் விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. விழாவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். கட்சியின் பொதுச் செயலாளர்கள் ம.சிந்தனை செல்வன், துரை.ரவிக்குமார், பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, முதன்மை செயலாளர் ஆளூர் ஷா நவாஸ், சட்டப்பேரவை உறுப்பினர் எல்.இ.ஜோதிமணி முன்னிலை வகித்தனர். சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து, விருதாளர்களின் வாழ்க்கை பயணம் மற்றும் சாதனைகள் குறித்த தகுதியுரையை வாசித்த திருமாவளவன், 7 பேருக்கான விருதுகளையும் வழங்கினார்.

அதன்படி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் கே.சொக்கலிங்கத்துக்கு அம்பேத்கர் சுடர், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனுக்கு மார்க்ஸ் மாமணி, மனித உரிமைப் போராளி வழக்கறிஞர் ஹென்றி டிபேனுக்கு பெரியார் ஒளி, சாமித்தோப்பு அடிகளார் பால.பிரஜாபதிக்கு காமராசர் கதிர், சமூக செயற்பாட்டாளர் ரூத் மனோரமாவுக்கு அயோத்திதாசர் ஆதவன், ஐஎன்டிஜே மாநில துணை தலைவர் முகமது முனீருக்கு காயிதேமில்லத் பிறை, நாமக்கல் தமிழறிஞர் பொ.வேல்சாமிக்கு செம்மொழி ஞாயிறு ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.

Related Stories: