சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தலைமை செயலகம் நோக்கி பேரணி: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தலைமை செயலகம் நோக்கி பேரணி நடைபெறும் என்று எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.

எஸ்டிபிஐ கட்சி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக அரசு கர்நாடகா, பீகாரை போல சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்திட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7% ஆக உயர்த்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாபெரும் பேரணி நடைபெறுகிறது. செப்டம்பர் 5ம் தேதி அன்று தலைமைச் செயலகம் நோக்கி மாபெரும் பேரணி நடைபெறும்.

Related Stories: