பாக். பிரதமர் ஷெரீப்புடன் துருக்கி அதிபர் பேச்சுவார்த்தை

இஸ்லாமாபாத்: துருக்கி அதிபர் ரெசிப் தயீப் எர்டோகன் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நேற்று முன்தினம் இஸ்தான்புல் நகருக்கு வந்தார். அட்டாதுருக் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஷெரீப்பை அந்நாட்டின் வர்த்தக துறை அமைச்சர் உமர் போலாட் வரவேற்றார். பின்னர் துருக்கி அதிபரை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேசினார். அதில் இரு தரப்பு வர்த்தக இலக்கை ரூ.4 .76 லட்சம் கோடியாக அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.காசாவில் நிலவும் மனித நேய நெருக்கடி குறித்து கவலை தெரிவித்த அவர்கள் முழுபோர் நிறுத்தத்தை வலியுறுத்தினர்.

Related Stories: