மாஸ்கோ: ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமீயா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த கிரிமீயா தீபகற்பத்தை தனிமைப்படுத்த உக்ரைன் ராணுவம் முயன்று வருவதால், சமீப வாரங்களில் அங்குள்ள முக்கிய உள்கட்டமைப்பு இலக்குகள் மீதான தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், தற்போது ஐந்தாம் ஆண்டில் இருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்ய மற்றும் உக்ரைன் தலைவர்கள் அமெரிக்க அதிபர் டிரம்புடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசினர்.
