சட்ட விரோத குடியேற்றம்; அமெரிக்காவில் 5 நாட்களில் 10,000 பேர் கைது

வாஷிங்டன்: அமெரிக்காவில் டிரம்ப் 2வது முறை அதிபராக பொறுப்பேற்ற பின்னர் சட்ட விரோத குடியேறிகள் நாடு கடத்த உத்தரவிட்டார். அதன்படி சட்ட விரோதமாக வசித்து வந்த இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நபர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டனர். இப்போது சட்ட விரோத குடியேறிகள் மீதான நடவடிக்கைகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த மாதம் கடைசி வாரத்தில் 5 நாட்களில் மட்டும் 10 ஆயிரம் பேரை குடிவரவு மற்றும் சுங்கதுறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு அந்தத் துறையினருக்கு விடுக்கப்பட்ட அழுத்தமே இந்தத் திடீர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Related Stories: