எண்ணூரில் 10 கிலோ கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

சென்னை: எண்ணூரில் 10 கிலோ கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். எண்ணூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் கஞ்சா விற்பதாக வந்த தகவலை அடுத்து போலீசார் சோதனை செய்தனர். 2 வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். கஞ்சா விற்பனை செய்த கார்த்திக், ராஜா மற்றும் சங்கீதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: