புகையிலை, மது விற்ற 5 பேர் கைது

 

ஈரோடு, ஜூலை 1: ஈரோடு மாவட்டத்தில் மது, புகையிலை விற்றதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க போலீசார் நேற்று ரோந்து மேற்கொண்டனர். இதில், மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக ஆப்பக்கூடலில் சவுந்திரராஜ் (35), பர்கூரில் கருப்பணன் (40), கடம்பூரில் பழனிசாமி (65), பெருந்துறையில் சத்யாஜிட் நஸ்கர் (24), ஆகிய 4 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 76 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல், புகையிலை மற்றும் குட்கா விற்றதாக அந்தியூரில் ஜெஸ்வின் (46), என்பவரை கைது செய்து, 120 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: