மூதாட்டியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது

 

மேல்மலையனூர், ஜூன் 29: மேல்மலையனூர் தாலுகா எய்யில் கிராமத்தில் மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். நேற்று முன்திம் நள்ளிரவு வீட்டில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் அதே கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் ஜீசன் (25) என்பவர் குடிபோதையில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இச்சம்பவம் வெளியில் தெரிந்தால் உன்னை கொலை செய்து விடுவேன் என கடுமையாக தாக்கி எச்சரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதில் பலத்த காயங்களுடன் மூதாட்டி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரேவதி விசாரணை நடத்தி ஜீசனை கைது செய்தனர்.

 

Related Stories: