திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 2: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லுார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட துலங்கம்பட்டு கிராம பகுதியில் காவல் உதவி ஆய்வாளர் மாதவன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே அனுமதியின்றி சட்டவிரோதமாக லாரியில் மணல் கடத்திய 3 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடி தலைமறைவாகினர். இதையடுத்து போலீசார் லாரி மற்றும் பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்து விசாரனை மேற்கொண்டனர்.
இதில் மணல் கடத்திய ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் அருண்பிரபு, சின்னசெவலை கிராமத்தை சேர்ந்த சாந்தமூர்த்தி, துலங்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
