×

எதற்கெடுத்தாலும் டைம் கேட்பதா? போதை பொருள் பயன்படுத்தியவர் அமைச்சரா? பிரேமலதா பாய்ச்சல்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் அறிஞர்கள், சீனியர் எல்லாம் உள்ளனர். அப்படி இருக்கும்போது கர்நாடகாவை இருப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு அனுபவம் இல்லாத புதியவருக்கு மிக முக்கியமான துறையான டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி அளிக்கப்பட்டு உள்ளது. அது சாதாரண பதவி அல்ல, மேகதாது அணை டேம் கட்டுவது சம்பந்தமாக பேச வேண்டியது.

இந்த பொறுப்பை அவருக்கு ஏன் கொடுத்துள்ளீர்கள் என்று முதலமைச்சரிடம் நான் கேட்டேன். இதனை மறுபரிசீலனை செய்து திரும்ப பெற்று தமிழ்நாட்டிலேயே மிகச் சிறந்த பொறுப்பை பற்றி விஷயம் தெரிந்தவர்களுக்கு வழங்க வேண்டும்.  எந்த பிரச்னை பற்றி கேட்டாலும் நாங்கள் அனைவரும் புதியவர்களாக உள்ளோம். 4 மாதம் அவகாசம் வேண்டும் என்கிறார்கள். ஆனால் 4 மாதம், 6 மாதம் வரை காத்திருந்தால் தமிழ்நாடு தாங்காது. ஐபிஎல் நடக்கிற ஒரு விளையாட்டு அரங்கில் சரத்குமார் என்ற அமைச்சர், அப்போது அமைச்சர் கிடையாது.

ஒரு வீடியோவை தற்போது நான் பார்த்திருக்கிறேன். அவ்வளவு பெரிய பப்ளிக் கிரவுண்டு, அந்த இடத்தில் உட்கார்ந்து போதை பொருள் அப்படி பயன்படுத்தினார் என்பதை நினைக்கும் போது, அது உண்மையிலேயே மிக மிக கண்டனத்திற்குரிய விஷயம். இன்று அவர் ஒரு அமைச்சர் இதை அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதுபோன்று பள்ளிகளிலும் பார்க்கிறேன், முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது படங்களை பள்ளிகளில் மாட்டுவதும், சினிமா பாடல்களுக்கு டான்ஸ் ஆடுவதும், பள்ளிகளில் நடைபெறுவது கண்டனத்திற்கு உரியது.

ஏனென்றால் ஏற்கனவே இந்த ஆட்சியின் மேல் எல்லா குழந்தைகளையும், பள்ளி மாணவர்களையும் மூளைச்சலவை செய்து ரீல்ஸ் மூலமாக ஆட்சியை பிடிச்சிருக்காங்க என்று கருத்து இருக்கிறது. பள்ளிகளில் அமைச்சர்கள் டான்ஸ் ஆடுவது போன்ற நிகழ்வுகள் கண்டனத்துக்குரிய விஷயம். முதல்வர் சொன்ன 717 மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளதா என்பதை பர்சனலாக செக் பண்ணி ஒரு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் என்று நான் சட்டசபையில் கேட்டுள்ளேன். அறிவிப்புகள் எல்லாம் வெறும் சொல்லாக இருக்க கூடாது, செயலில் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Premalatha ,Virudhachalam ,DMDK ,General Secretary ,Tamil Nadu ,Karnataka ,Delhi ,
× RELATED ராமநாதபுரத்தில் பயங்கரம்...