×

இதை பெரிதாக்க விரும்பவில்லை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை: முதல்வருக்கு வலிக்காமல் சொல்லும் அமைச்சர் ராஜேஷ்குமார்

நாகர்கோவில் : தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார், நாகர்கோவிலில் நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தில், எந்த நிலைப்பாடும் நாங்கள் எடுக்கவில்லை. புதிய அரசு பொறுப்பேற்று இருக்கிறது. இந்த அரசு பொறுப்பேற்று குறைந்த நாட்கள் தான் ஆகிறது.

மக்கள் நல பணிகளில் இந்த அரசின் செயல்பாடுகளை நாங்கள் உற்றுநோக்கி வருகிறாம். எதற்கெடுத்தாலும் குறை சொல்ல நாங்கள் விரும்பவில்லை. மக்கள் நல திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்பட வேண்டும். தொலைநோக்கு பார்வையுடன் தான் எதையும் பார்க்க வேண்டும். டெல்லி பிரதிநிதி நியமனம் சரியா, தவறா என்பதை ஆராய்ந்து பார்க்க கூடாது. இதை ஆதரிப்பதாகவும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இதை நாங்கள் பெரிதுப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணாவை நியமித்ததற்கு கடந்த சில நாட்களுக்கு முன் காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இவரை தவிர வேறு யாரும் காங்கிரசில் இருந்து நேரடியாக கண்டனம் தெரிவிக்கவில்லை. தற்போது அமைச்சர் ராஜேஷ்குமாரும் முதல்வருக்கு வலிக்காமல் நியமனம் குறித்து கருத்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Congress ,Tamil Nadu government ,Delhi ,Minister ,Rajesh Kumar ,Chief Minister ,Nagercoil ,Tamil Nadu ,Tourism Minister ,Manickam Thakur ,
× RELATED ஓம் நமசிவாய.. ஓம் நமசிவாய.. ” தஞ்சை...