நெல்லை: வீரவநல்லூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி மதுரையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் உயிரிழந்தார். தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி மாயமான நிலையில், சுமார் 3 மணி நேரம் தேடலுக்கு பின் சீனிவாசன் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
