அவர்கள் வசதிக்காக வெள்ளை அறிக்கை தயாரிப்பு; தவெக அரசு செலவினத்தை காட்டாதது ஏன்?.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி

சென்னை: தவெக அரசு செலவினத்தை காட்டாதது ஏன்? என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; நலிவடைந்த மின்சாரத் துறையை மேம்படுத்த பல முன்னெடுப்புகளை திராவிட மாடல் அரசு மேற்கொண்டது. திமுக ஆட்சியில் மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மின்துறையை தன் துறையை போல கவனித்துக் கொண்டார் மு.க.ஸ்டாலின். திராவிட மாடல் ஆட்சியில் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் 3 முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் இருந்த வருவாய் பற்றாக்குறையை திமுக ஆட்சியில் குறைத்தோம். மின்சாரத்துறையில் ரூ. 58,000 கோடி வருவாய் பற்றாக்குறையை ரூ. 34,447 கோடியாக குறைத்துள்ளோம். மின்வாரியத்தில் வருவாய் பற்றாக்குறையை குறைத்தது திமுக. மின்தேவை 2019ல் 94,000 மில்லியன் யூனிட்டில் இருந்து 2024ல் 1.16 லட்சம் மில்லியன் யூனிட் ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் மின்தேவை தொடர்ந்து அதிகரித்தபோதும் தடையில்லாமல் மின்சாரம் வழங்கப்பட்டது.

திமுக ஆட்சியில் மின்சாரத்துறையின் கடன் அளவு 9.5%க்குள் கொண்டு வரப்பட்டது. அதிமுக ஆட்சியை ஒப்பிடுகையில் வருவாய் பற்றாக்குறையை குறைத்தது திமுக அரசு. வெள்ளை அறிக்கையில் தவெக அரசு செலவினத்தை காட்டாதது ஏன்? அதிமுக விட்டுச் சென்ற ரூ.1.59 லட்சம் கோடி கடனுக்காக ஆண்டுதோறும் ரூ. 15,000 கோடி வட்டி செலுத்தினோம். தங்களுக்கு வசதியாக வெள்ளை அறிக்கையை தவெக அரசு வெளியிட்டுள்ளது. தவெக அரசு உள்நோக்கத்தோடு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கான வட்டியை நாங்கள் செலுத்திய விவரம் மறைக்கப்பட்டுள்ளது.

மின்தேவையை சமாளிக்க வெளியிலிருந்து கொள்முதல் செய்ததால் செலவினம் அதிகரித்தது. குறுகிய கால மின்தேவைக்கு டெண்டர் விடப்பட்டு கொள்முதல்.. செய்யப்படுவதுதான் நடைமுறை. கோடைகால மின்தேவைக்காக குறுகிய காலத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. மின்தேவை அதிகரிப்பை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. கோடைகால அவசர மின்தேவைக்குக் கூட கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்கவில்லை.மின்தேவை அதிகரிப்புக்கு ஏற்ப பல்வேறு பணிகளைச் அசெய்துள்ளோம்.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போது மின்சாரத்துறையின் கடன் ரூ.1.59 லட்சம் கோடியாக இருந்தது. மின் வாரியத்தில் மின்சார கொள்முதல் உள்ளிட்ட செலவினங்கள் அதிகரித்துள்ளதை, தங்களுக்கு வசதியாக தவெக அரசு வெள்ளை அறிக்கையில் மறைத்துள்ளது. மின்சாரம் கொள்முதல் வழிமுறைகளை தவெக அமைச்சர் படித்து அறிந்து கொள்ள வேண்டும். கடந்த காலங்களிலும் ஏற்கனவே இருந்த பணியாளர்களை வைத்துதான் சீரான மின்விநியோகம் வழங்கினோம். கடந்த 5 ஆண்டுகளில் மின் உற்பத்தி திறன் 9,032 மெகாவாட் அதிகரிக்கப்பட்டுள்ளது.

423 துணை மின் நிலையங்கள் அறிவிகப்பட்டு பல துணை மின் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. பல துணை மின் நிலையங்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன; சிலவற்றுக்கு பணிகள் நடைபெற்று வருகின்றன. ரூ..10,109 கோடியில் 121 துணை மின் நிலையப் பணிகள் நடப்பதை அமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யால் பணி ஆணை வழங்கப்பட்டவர்கள் 40 நாள் தவெக ஆட்சியில் தேர்வானவர்களா? 40 நாட்களில் மின்துறை பணியாளர் தேவையை டி.என்.பி.எஸ்.சி.க்கு எழுதி ஒப்புதல் பெற்று ஆணை வழங்கினார்களா? ஆகஸ்ட்டில் தேர்வு வைத்தோம்; இப்போது பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய்யால் பணி ஆணை வழங்கப்பட்டவர்கள், திமுக ஆட்சியில் தேர்வானவர்கள் ள் என்பதை ஒப்புக் கொள்கதிமுக ஆட்சியில் தேர்வு செய்யப்பட்டவர்களை தவெக அரசு தேர்வு செய்தது போல் அமைச்சர் பேசியுள்ளார். “ஏதோ இத்தனை ஆண்டுகள் மின்சார வாரியத்தில் யாருக்குமே பணி உயர்வு வழங்கப்படாததுபோல, அமைச்சர் பேசுகிறார். பணி நியமனங்களும், பதவி உயர்வுகளும் தேர்தல் அறிவிப்பால் மேற்கொள்ள முடியவில்லை” பணி நியமன ஆணைகளிலும் தவெக அரசு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டுள்ளது.

மின்கட்டணம் உயர்ந்த போதெல்லாம் அரசு சார்பில் நிதி ஒதுக்கி மக்களை காத்தது திமுக. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்க மின்வாரியத்துக்கு அரசு இழப்பீட்டை வழங்கி வந்தது. ஒவ்வொரு ஆண்டும் தேதி மாறாமல் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தவெக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை வெளிப்படைத் தன்மையுடன் இல்லை. குற்றச்சாட்டுகளை கூறுகிறீர்கள் என்றால் ஆதாரத்தோடு கூறுங்கள்; ஆதாரம் இல்லையென்றால் பொத்தாம் பொதுவாக குற்றம் சுமத்தாதீர்கள். மின்சாரத்துறை செலவினங்கள், வருவாய் குறித்து வகை வாரியாக வெள்ளை அறிக்கையில் வெளியிட வேண்டும். என்று கூறினார்.

Related Stories: