கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு

நாமக்கல், ஜூன் 24: நாமக்கல் ஆவினில், கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு ஆட்கள் தேர்வு நடக்கிறது. நாமக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்(ஆவின்) தற்போது, 500 பிரதம சங்கங்களின் மூலம் தினசரி சராசரியாக 1,51,000 லிட்டர் பால் கொள்முதல் செய்து, பால் உற்பத்தியாளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து வருகிறது.

தமிழக அரசு, தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவைகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகள் கிடைத்திடவும், அதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரம் வளம் பெற்றிடவும், முனைப்புடன் திட்டங்களை செயலாற்றி வருகின்றது. அதன்படி, பாரத் சஞ்சீவினி செயலி மூலம், கால்நடை மருத்துவ வழித்தடங்கள் அமைக்கப்பெற்று தற்போது, காலியாக உள்ள 9 கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு 11 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிட, நிர்வாக இயக்குநரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவ பட்டதாரிகள் (வயது வரம்பு 50 வயதிற்குள்) தங்களை பற்றிய முழுமையான விவரங்களுடனும், உரிய பட்ட படிப்பு கால்நடை மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடனும் வரும் 3ம் தேதி அன்று காலை நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம்.
நாமக்கல் மோகனூர் சாலை, கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில், தேர்வு நடைபெறுகிறது என நாமக்கல் மாவட்ட கலெக்டர் மதுபாலன் தெரிவித்தார்.

Related Stories: