லக்னோ: உத்திரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. தீ விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து தீயை அணைத்து வருகின்றனர்.
பாதுகாப்பு குறைபாடு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
