லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட பயிற்சி மையத்திற்குள் சுமார் 10 பேர் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ பயங்கரமாக எரிவதால் பயிற்சி மையத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயிரை காப்பாற்றிக் கொள்ள கட்டடத்தில் இருந்து சிலர் குதித்துள்ளனர்.
