காங்கயம், ஜூன் 22: திருப்பூர் மாவட்டம், காங்கயத்தில் ஆயுஷ் அமைச்சகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் இணைந்து 12ம் ஆண்டு சர்வதேச யோகா தினம் காங்கேயம் அகிலாண்டபுரத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை காங்கேயம் எம்எல்ஏ என்எஸ்என். நடராஜ் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக ஸ்வாமி கீதாம்ருதானந்தா கலந்து கொண்டு யோகா பயிற்சியின் நன்மைகளையும், ஆரோக்கியம் குறித்தும் கருத்துக்கள் அடங்கிய சிறப்புரை வழங்கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
