உடுமலை,ஆக.1: எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அமராவதி அணையில் இருந்து வண்டல் மண் அள்ள அரசு அனுமதி அளித்துள்ளது.உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இந்த அணையின் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 55 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை காரணமாக பாம்பாறு, தேனாறு, கூட்டாறு ஆகியவற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து, தூவானம் அருவி வழியாக அணைக்கு தண்ணீர் வந்து சேருகிறது. மழையின்மை காரணமாக அமராவதி அணையிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
