தோகைமலை அருகே கபடி போட்டியில் வீரர்களுக்கு பரிசுகோப்பை

 

தோகைமலை, ஜுன் 22: தோகைமலை அருகே பில்லூரில் நடைபெற்ற கபாடி போட்டியில் திரளானோர் கலந்து கொண்டனர். பில்லூர் அண்ணா விளையாட்டு திடலில் 60 முதல் 62 வரை உள்ள கிலோ எடைபிரிவில் உள்ள விளையாட்டு வீரர்களை கொண்டு 2 நாள் நடந்த கபாடி போட்டி நடைபெற்றது. பில்லூர் ஊராட்சி முன்னால் தலைவர் ராகவன், முன்னால் ஊராட்சி துணை தலைவர் நாகராணி நாகராஜ், பில்லூர் ஊர் கவுண்டர் கோபாலாகிருஷ்ணன், தோகைமலை மேற்கு ஒன்றிய அதிமுக அம்மா பேரவை செயலாளர் சுரேஷ் (எ) முருகானந்தம் மற்றும் விழா கமிட்டியாளர்கள் இளைஞர் அமைப்பினர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியில் கரூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 அணிகள் விளையாடினர்.

Related Stories: