கரூர் மாவட்டத்தில் இரவு நேரங்களில் 2 நாட்களாக தொடர் மழை

 

கரூர், ஜூன் 22: கரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து கரூரை குளிர்வித்து வருவதால் மக்கள் சந்தோஷமடைந்துள்ளனர். ஜூன் மாதம் துவங்கி செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் தமிழகத்தின் தென்மேற்கு பருவமழை காலமாக உள்ளது. கரூர் மாவட்டத்தின் ஆண்டின் சராசரி மழையளவை எட்ட இந்த சீசனில் பெய்யும் மழை முக்கியமானதாக உள்ளது.ஆனால், ஜூன் மாதம் பிறந்து 15 நாட்கள் மழை பெய்யாத நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Related Stories: