சென்னை: பெரியபாளையம் அருகே அமோனியா வாயு கசிவால் 7 பேர் உயிரிழந்த செய்தி வேதனை அளிக்கிறது. அமோனியா வாயு கசிவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவிக்கிறேன்’ என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ‘மருத்துவமனையில் உள்ள தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை வழங்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.தொழிலாளர் நலன், பாதுகாப்பில் எந்தவொரு சமரசத்துக்கும் அரசு இடம் தரக் கூடாது’ எனவும் உதயநிதி தெரிவித்துள்ளார்.
