பெரம்பலூர் அருகே கொளக்காநத்தத்தில் தவெகவினர் வைத்த முதல்வர் ஜோசப் விஜயின் பேனர் கிழிப்பு: உட்கட்சி பூசலால் பரபரப்பு

பாடாலூர்: தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாளையொட்டி, தவெக சார்பில், பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் வாழ்த்து பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. அக்கட்சியினர் நேற்று முன்தினம் கொண்டு வந்து வைத்தனர்.

இந்நிலையில் பேனர் வைத்த தவெகவினர் இன்று காலை வந்து பார்த்தபோது பேனர் காணவில்லை. பேனரில் இருந்த இரும்பு கம்பிகள் மட்டும் இருந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தவெக பிரமுகர் சுகுமார் மற்றும் அவரது நண்பர்கள், நள்ளிரவில் தவெகவின் பேனர் கிழிக்கப்பட்டதாக மருவத்தூர் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் சிலர் வந்து தவெக தலைவர் ஜோசப் விஜயின் பேனரை கிழித்து சென்றது தெரியவந்தது. இது உட்கட்சி இருக்கும் சிலர் செய்த சதி திட்டம் என்று தவெக பிரமுகர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

அதாவது கட்சிக்குள் பொறுப்பு வழங்குவது, பெறுவது தொடர்பாக உட்கட்சி பூசல் ஏற்பட்டிருந்தது. இந்தநிலையில் சுகுமார், ஜோசப் விஜயிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி வைத்திருந்த பேனரை கிழித்திருப்பதால், கொளக்காநத்தம் பகுதியில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மருவத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: