சென்னை: சென்னை, அரசு பள்ளியில் 11 வயது மாணவியை மாதவிடாய் காரணமாக பள்ளி முடியும் வரை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக ஆசிரியர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது. அப்படி நடந்திருந்தால் மிகப்பெரிய தவறு என கூறியுள்ள பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன், விசாரணை அறிக்கை கோரியுள்ளதாகவும், அது வந்ததும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
