நெல்லை: நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த கஞ்சா வியாபாரி வேம்பையா கைது செய்யப்பட்டார். கடந்த 5 ஆண்டுகளாக வெவ்வேறு மாவட்டங்களில் தலைமறைவாக இருந்த வேம்பையாவை மேலப்பாளையம் போலீசார் கைது செய்தனர். கைதானபோதும் ஒரு கிலோ கஞ்சாவுடன் போலீசாரிடம் சிக்கினார்.
