சட்டமன்றத்தில் 2 முறை தேசியகீதம் பாடப்பட்டது ஏன்.? ஆளுநருடனான தவெக அரசின் இணக்கம் எதுவரை செல்ல போகிறது.!! திமுக கேள்வி

சென்னை: ஆளுநருக்கு இணக்கமாக தவெக அரசு உள்ளதாக சட்டப்பேரவையில் திமுக சட்டமன்ற உறுப்பினரான முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றம்சாட்டி உள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, சட்டமன்றத்தில் ஒருமுறை பாடப்பட வேண்டிய தேசியகீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் என்று முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோர் கேள்வி எழுப்பினர். தேசிய கீதம் என்பது இறுதியாகவே பாடப்பட வேண்டும் என திமுக கொறடா எ.வ.வேலு கூறினார்.

தொடர்ந்து பேசிய எஸ்.எஸ்.சிவசங்கர், முதல்வர் விஜய் நிதிஆயோக் கூட்டத்தில் பேசும் போது இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார். இப்படி தமிழ்நாடு பற்றி பெருமிதமாக முதல்வர் விஜய் டெல்லியில் பேச காரணமே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான். தவெக அரசு எப்படி செயல்பட போகிறது என்பதை ஆளுநர் உரை காட்டுகிறது. அப்படி என்றால் திமுக இதற்கு முன் சொன்னது தான் நடக்கிறதா! என எஸ்.எஸ்.சிவசங்கர் கேள்வி எழுப்பி உள்ளார். ஆளுனருடனான தவெக அரசின் இணக்கம் எதுவரை செல்ல போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆளுநர் பற்றி அவைகுறிப்பில் எதுவும் இடம்பெற கூடாதா? ஆளுநரை பற்றி எதுவும் பேச கூடாது என அவை முன்னவர் செங்கோட்டையன் கூறுவது ஏன்? என சிவசங்கர் கேள்வி எழுப்பினார். திமுக சாதனையை வெட்டி, ஒட்டி தான் ஆளுநர் உரை உள்ளது என்றும் விமர்சித்து உள்ளார்.

Related Stories: