அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு

 

திருப்பூர், ஜூன் 19: திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதல்வர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, அணையில் இருந்து ஆற்று மதகு வழியாக, தாராபுரம் நகராட்சியின் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் இன்று (19-ம் தேதி) முதல் 23-ம் தேதி வரை 4 நாட்களுக்கு 224.64 மில்லியன் கன அடிக்கு மிகாமல், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

Related Stories: