மதுரை, ஜூன் 19: மதுரை- திண்டுக்கல் பைபாஸ் சாலையில், சாலையோரம் மணல் குவிந்து கிடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மதுரை மாவட்டத்தின் பழைய எல்லையான கன்னியாகுமரி-வாரணாசி பைபாஸ் சாலையில் பாத்திமா கல்லூரியிலிருந்து சமயநல்லூர் வரையிலான 8 கி.மீ, தூரச்சாலை தமிழக நெடுஞ்சாலைத்துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கீழ் பராமரிக்கப்படுகிறது. இச்சாலை மதுரை- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையையும், மாவட்டத்தின் மேற்கு பகுதி கிராமங்களையும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. தினசரி, லட்சக்கணக்கான வாகனங்கள் இதில் சென்று வருகின்றன.
